Wednesday, August 3, 2011

தெனாலிராமனும், பவர்கட்டும்

தெய்வத்திருமகள்

மகாராணி விஜயலதா: என்ன குடிமக்களே! முந்தைய கொடுங்கோல் ஆட்சியில் உங்களுக்கு மின்சாரம் தராமல் உள்ளையும், புறத்தையும் சுட்டெரித்த சூரிய குடும்பத்து ஆட்சியை நீக்கி பசுமையைப் பரப்பி வரும் என் ஆட்சியில், எனது ஆணைப்படி இயங்கும் துறையான மின்சாரத் துறை சிறப்பான முறையில் இயங்கி என் குடிகளை குளிர்வித்து கொண்டிருக்கிறது! இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் குடிகளே?!?!?!

மா: வளசரவாக்கத்தில் கடந்த 2 வாரங்களாக பிடுங்கவில்லை! மயிலாடுதுறையில் 3 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரமாகி விட்டது. மிகச்சிறப்பு. குடிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

பா: ஒரு மணி நேரம் நான் வசிக்கும் பகுதியில் மின்சாரத் தடை முன்னும் உண்டு இப்போதும் உண்டு! குடிகள் மகிழ்ச்சியாகவும் இல்லை, மகிழ்ச்சி இல்லாமலும் இல்லை.

அன்று மாலை ’வி’ தொலைக்காட்சியில் “மக்களின் மகிழ்ச்சி பெருகும் பொன்னாட்சியின் மற்றொரு உதாரணம் இதோ”

முற்றும்.


I AM SAM

கிருஷ்ணதேவராயரால் சிறிது காலம் நகர்வலம் சென்று நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள இயலவில்லை. அதனால் அரண்மனைகளுக்கு வரும் சாதரண மனிதர்களுடன் பேசும் போது அவ்வப்போது நாட்டின் நிலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அன்று அரசருக்கு சிகையலங்காரம் செய்ய நாவிதர் வந்திருந்தார். கூட தெனாலிராமனும் இருந்தார்.

கி.தே.ரா: என்ன நாவிதரே! நாட்டில் மக்கள் எல்லாம் நலமா! குடிகள் ஆட்சியைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?

நாவிதர்: அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள் மன்னா! தங்களது நல்லாட்சியால் அனைத்து குடிகளின் கைப்பையிலும் ஒரு சவரன் தங்கம் இருக்கிறது! அவ்வளவு சுபிட்சம்!

அப்போது தெனாலிராமன் நாவிதனின் பையில் இருக்கும் தங்கத்தை பார்க்கிறான்!

நாவிதன் சென்ற பின்

கி.தே.ரா: பார்த்தாயா ராமா! எனது ஆட்சியில் அனைவரிடமும் தங்கம் இருக்கிறது!


 தெ.ரா: ஆம் மன்னா! தாங்கள் கூறியது சரிதான்!

அடுத்த வாரம் நாவிதர் அரண்மனைக்கு வரும் ஒரு நாள் முன்பு தெனாலி நாவிதனிடம் இருந்து அந்த தங்கத்தை திருடிவிடுகிறான்.


கி.தே.ரா: என்ன நாவிதரே! நாட்டில் மக்கள் எல்லாம் நலமா! குடிகள் ஆட்சியைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?


நாவிதர்: அனைவரும் துன்பத்தில் உள்ளார்கள் மன்னா! நாட்டில் களவும் கொள்ளையும் பெருகிவிட்டது! ஒரு சவரன் தங்கத்தைக் கூட கைப்பையில் வைத்திருக்க இயலவில்லை!

நாவிதன் சென்ற பின்


கி.தே.ரா: என்ன ராமா இது?!?! எனது ஆட்சியில் திருட்டா? காலம் மிகவும் கெட்டுவிட்டது


தெ.ரா (புன்னகையுடன்) : ஆம் மன்னா! தாங்கள் கூறியது சரிதான்!


கிருஷ்ண தேவ ராயருக்கு புரிந்தது!


ஆனால் இன்று இருக்கும் நவீன அரசர்கள் வெறும் முதல் பாதியை மட்டும் விளம்பரம் இட்டு பொய்த் தோற்றம் உருவாக்கி தங்கள் தொலைக்காட்சியில் விளம்பரமும் செய்துவிடுகிறார்கள். நவீன தெனாலிராமன் தான் இன்று நமக்கு தேவை.

3 comments:

  1. இப்படியும் அரசியல் பண்ணலாம? சூப்பருங்க!

    ReplyDelete
  2. இங்கே வேறு ஒரு பிரச்சனையும் உள்ளதே. முந்தின அரசாங்கம் கஜானாவை காலி செய்து விட்டு சென்றால் அடுத்து வரும் ஆட்சி என்ன செய்ய முடியும்? நல்ல பதிவு, புதிய கோணம்!
    amas32

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து மிக அருமை! மிகவும் பிடித்திருக்கிறது !

    ReplyDelete

வாங்க பழகலாம்