Thursday, January 26, 2012

வைரம் உராசுகிறது



தமிழ் திரையிசைப் பாடல்களின் காலத்தில் வைரக்காலம் ஒன்று நடக்கிறது. ஒரு கவிஞனின் பேனா, மையில் இருந்து உணர்வுகளை வடிகட்டி இசையுடன் சேர்க்க கொடுத்து கொண்டிருக்கிறது. அந்தக் வைரம் மக்கள் கேள்விகளோடு உராசி பார்க்க முயன்றது Twitter தளத்தில். அதன் தொகுப்பே இந்தப் பதிவு.



@kadaikutti ARFU: மூன்றாம் உலகப் போரில் பிரச்சனைகள் மட்டும் சொல்லப்படுமா அல்லது தீர்வும் வருமா ?
@vairamuthu:  இந்த இதழ் முதல் தீர்வுகள் ஆரம்பிக்கின்றன

@RAJNIKARTHIK
 
Karthik:  நீங்கள் மிகவும் ரசித்த ரஜினி அவர்களின் திரைப்படம் எது?
@vairamuthu: அண்ணாமலை

@gpradeesh
 
Pradeesh: தாங்கள் திரைத்துறையில் சாதிக்க இனிஎதுவும் இருப்பவதாய் தெரியவில்லை.முழுநேர தமிழ்,சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா?
@vairamuthu: இலக்கியமும் தமிழ்ச்சமூகம் சார்ந்த பணிதான்; செயல்படவும் வருவேன்

@siva_says
 
siva subramani: இப்போதைய தமிழ் சினிமாவின் பாடல்கள் ரசிப்புத்திறனை மேம்படுத்தும் வண்ணம் உள்ளது என நினைக்கிறீர்களா?
@vairamuthu: இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்

@Harshan_Tweets
 
Sriharshan: விஸ்வரூபம் மற்றும் கோச்சடையன் பாடல்கள் பற்றி?
@vairamuthu: விஸ்வரூபம் நெருப்புப்பாடல்கள் , கோச்சடையான் மழைப்பாடல்கள்

@ChellaBuska
 
Chella Buska:  மதன் கார்க்கி எழுதிய திரைப் பாடல்களில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?
@vairamuthu: வைரஸ் இல்லா கணினி

@Balu_SV பாலு: ரகுமானின் குணநலன்களில், உங்களை கவர்ந்த ஒன்றை பற்றி சொல்லுங்களேன்!
@vairamuthu:  கர்வம் இல்லாத பணிவு

@4SN
 
4SN: உங்களின் படைப்புகளில் (திரையிசை தவிர்த்து) உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
@vairamuthu: கள்ளிக்காட்டு இதிகாசம்

@manithemodest
 
manikandan: தாங்கள் விஸ்வரூபத்தில் எத்தனை பாடல்கள் எழுதி இருக்கிறீர்கள்?
@vairamuthu: இதுவரை நான்கு பாடல்கள்

@Nelofer8
 
Nelofer Shabhu:  திருக்குறளை குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் கதை வடிவத்தில் எழுதும் யோசனை ஏதாவது இருக்கிறதா?
@vairamuthu:  கலைஞரின் குறளோவியம் படித்துக்காட்டுங்கள்

@sathishkalanith Sathish kalanithi: நீங்கள் உங்கள் முன்மாதிரியாக யாரை நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
@vairamuthu: என்னைவிட வெற்றிபெற்றவர்களை

@S_Gandhi82
 
Gandhi S:  ஐயா! உங்களுக்குப் பிடித்த உங்களின் பாடல்?
@vairamuthu: முதல் பாட்டு

@SridharSamson
 
புல்லட் பாண்டி: நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்கு பிடித்தது எது?
@vairamuthu: பெய்யென்ப் பெய்யும் மழையில் 'சிறகாயணம்'

@kannan_test_123
 
மைக் testing1234:  அய்யா தங்களுக்கு பிடித்த பொழுது போக்கு என்ன?
@vairamuthu: வான் பார்ப்பது.

@siva_says
 
siva subramani: பாரதிராஜா+இளையராஜா+வைரமுத்து என்ற அற்புத இசைக்கூட்டணி போல் தற்போது?
@vairamuthu: மணிரத்னம் - .ஆர். ரகுமான் - வைரமுத்து

@kadaikutti
 
ARFU: 3ஆம் உலகப் போருக்காக நீங்கள் செய்த ஆய்வுகளை விடியோவாக பகிர்வீர்களா ?
@vairamuthu: இதுவரை பதிவு செய்யவில்லை இனி பதிவு செய்யலாம் என்று ஆசை வருகிறது

@karthick_srt
 
karthik:  ஐயா நான் திரைப் பாடல் ஆசிரியன். சில பாடல்களும் எழுதியுள்ளேன். என் போன்றவர்க்கு சரியான  திசைக் காட்ட ஏதாவது திட்டம் இருக்கிறதா?
@vairamuthu: பாட்டுப்பட்டறை ஒன்று நிகழவிருக்கிறது. வந்தால் அறிவீர்கள்;

@Sunradpm
 
Sundar:  எங்கள் தலைவர் ரஜினி எப்படி உள்ளார்? கொச்சடையனுக்கு பாடல்கள் எழுதி விட்டர்களா?
@vairamuthu: பழைய ரஜினியில் 90 விழுக்காடு வந்துவிட்டார். கோச்சடையானுக்கு 3 பாடல்கள் முடிந்துவிட்டன.

@iThamilachi
 
ஷர்மி:  எப்படி இருக்கிறீங்க ஐயா? பொண்மணி அம்மா நலமா?
@vairamuthu: மிக நலம்

@writernaayon
 
நாயோன்:  மீனவர் படுகொலை பற்றி ஒரு வெண்பா இரண்டே அடிகளில்?
@vairamuthu: "தண்ணீரில் வாழ்கிறவன் சந்ததிகள் எந்நாளும் கண்ணீரில் சாகாமற் கா"

@Nattu_G
 
ஓலைக்கணக்கன்: @vairamuthu: "முகில் இனங்கள் அலைகிறதேபாடல் வரிகளின் inspiration அல்லது behind the scenes அனுபவங்கள்?
@vairamuthu: சின்ன வயதில் பெளர்ணமியில் வெட்ட வெளியில் வான்பார்த்துப்படுத்திருந்த நாட்களில் தோன்றியது அந்தக் கற்பனை

@Ilamkavi
 
Vivek Prabu:  சமூகத்தை நல்வழிப் படுத்த ஏற்ற களம் கவிதையா? பாடலா?
@vairamuthu: கவிதை சுமந்த பாடல்தான் நல்ல களம்

@sureshbalakrish
 
suresh:  தங்களின் முதல் பாடலான “இது ஒரு பொன்மாலைப் பொழுது” வெளிவந்த போது தங்களின் மனம் எப்படி உணர்ந்தது?
@vairamuthu: 12 வருடக்கனவு பலித்தது என்ற பரவசம் இருந்தது

@talapuli
 
rakesh chandra  சிறந்த பாடலாசிரியரான நீங்கள் ஏன் இன்னும் திரைப்படங்களில் வசனகர்த்தா ஆகவில்லை ..!
@vairamuthu: நட்பு - துளசி -அன்று பெய்த மழையில் - வண்ணக்கனவுகள் - என் வசனத்தில் வந்த படங்களே. இப்போது காலம் இல்லை வசனத்திற்கும் - எனக்கும்

@iam_SGR
 புரட்சிகனல் SGR: ஐயா!நீங்கள் எழுதிய பழைய பாடல்களில் உங்களுக்கு நினைவில் வரும் முதல் பாடல்?
@vairamuthu: ஆயிரம் தாமரை மொட்டுக்களே

@kanapraba
 
kanapraba:  திரையிசைக்கவிஞர் கடந்து வசனகர்த்தாவாகவும் நட்பு உள்ளிட்ட படங்களுக்குப் பணியாற்றியுள்ளீர்கள் அவை மன நிறைவை அளித்த அனுபவங்களா?
@vairamuthu: நட்பும் வண்ணக்கனவுகள் இரண்டு படங்களும் ஓரளவு நிறைவு தந்தன

@NamVoice
 
mcp.msr :  உங்கள் எழுத்தில் வட்டார மொழி வழக்கு சிறப்பாக உள்ளது. நகரமயமாக்கலில் வட்டார மொழி வழக்கு சிதைந்து வருவதை தடுக்க என்ன செய்யலாம்
@vairamuthu: வட்டார வழக்குப் படைப்புகள் நிறைய வெளிவர வேண்டும்; மாவட்டச் சொல்லகராதிகள் தொகுக்கப்பட வேண்டும்

@santhu__92
 
santhosh:  உங்கள் சமீப படைப்புகள் கள்ளிகாட்டு இதிகாசம் முதல் மூன்றாம் உலகப்போர் வரை உரைநடையில்,தண்ணீர்தேசம் போல் ஒரு படைப்பு மீண்டும் எப்பொழுது?
@vairamuthu: மூன்றாம் உலகப் போர் முடியட்டும்

KJPriyan
 
சோழன்:  உங்கள் பாடல்களுக்கு திரையில் மென்மேலும் மெறுகேற்றகூடியவர் யார்???
@vairamuthu: இயக்குநர்கள் நடிகர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள்

@Karuppiah_here Karuppiah: நாம் தமிழன் என்று பெருமைப்படும்படியாக எந்த விசயத்தை கூறுவீர்கள்?
@vairamuthu: நம் தாய் மொழியான தமிழ்மொழியை அதில் விளைந்த திருக்குறளை

@Ntt_22 N.T.T:  தற்போது வெளிவரும் பாடல்கள் இசைக்கு மடுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன கவி வரிகளுக்கு இல்லை இதைப் பற்றிய உங்கள் கருத்து ???
@vairamuthu:  நானும் கவலைப்படுகிற கருத்து; விரைவில் தீர்க்கப்படவேண்டிய கவலை

@Ilamkavi
 
Vivek Prabu:  படிக்கும் காலத்தில் மாணவர்கள் புத்தகம் வெளியிடுவது பற்றி விமர்சனம் எழுகின்றன,தங்கள் கருத்து?!
@vairamuthu: படைப்பாற்றலுக்கு வயதில்லை . இளமையில் தொடங்குகிறவன் விரைவில் வெற்றி பெறுகிறான்

@RagavanG
 
GiRa:  என் பெயரே எனக்கு மறந்து போன வனாந்தரத்திலே :) இந்த இனிய கவிதையின் ஒலிவடிவத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் கிடைக்குமா?
@vairamuthu: விரைவில் எனது இணையத்தளத்தில் வெளியிடுவேன்

@SIVATHENNARASU
 
SIVATHENNARASU: கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அவர் கையால் புத்தகம் வெளியிட்டீர்கள்.அதை ஏன் பொது இடத்தில் நடத்தமுடியவில்லை?உங்கள் பெருமைக்காகவா?
@vairamuthu: பாதுகாப்புக் காரணங்களுக்காக

@sureshbalakrish
 
suresh  thaangalukkum bharathi raja avarkalukkum idayeyaana natpu kurithu?
@vairamuthu: மண்ணின் மைந்தர்கள் நாங்கள்; மண்ணுக்கும் வேருக்குமான நட்பு எங்களுடையது

@valavan_t
 
Thirumavalavan VR  ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில்உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சிஎன்று நீங்கள் பாட்டு எழுதி அவருக்கு உதவியிருப்பீர்கள்.
@vairamuthu: பெருமைப்படுத்துவதே நோக்கம்.  கிண்டல் அல்ல

@jeevs1991
 
jeevitha antonthas  வணக்கம். நானொரு ஈழ மகள்.இன்று உறவுகளை சொந்த மண்ணில் இழந்துவிட்டு, மலேசியாவில் அகதியாய்.எம் வலி ஆறுமா? அடிமை வாழ்வு தீருமா???
@vairamuthu: ஈழச்சகோதரிகயே! உன் வலிதான் என் வலியும். நீ நாட்டை இழந்தவள்;நான் ஊரை இழந்தவன். எந்த மண்ணில் விதைக்கப்பட்டாலும் வீரிய விதை முளைத்தே தீரும்.யாதும் ஊரே யாவரும் கேளிர்வாழப் பழகு

@jeevs1991
 
jeevitha antonthas அடிமுடியாய் ஆண்ட மண்ணில் இன்னும் அடிமைகளாய் வாழும் எம் இரத்த உறவுகளின் நிலையை மாற்றியமைக்க இன்றைய இலக்கிய சினிமா உலகம் உதவுமா?
@vairamuthu: இன்னும் உதவ வேண்டும்; இது போதாது

@NeshNeshh
 
Nesh Sir,when ur coming to Malaysia?
@vairamuthu: மே மாதம் வருவதற்கு வாய்ப்பு உண்டு

@arisuvadi
 
bala: கலைஞருடன் உங்கள் நெருக்கத்துக்கான காரணம்? அவர் தமிழையை மதிப்பது போல எனக்குத் தோன்றவில்லை! தாங்கள் இந்த கேள்விக்கு விடையளிக்க மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கேட்கிறேன்! :-)
@vairamuthu: தமிழை மதிக்கும் கலைஞர் தமிழ்க்கவிஞர்களையும் பெரிதும் மதிக்கிறார்; நேசிக்கிறார்.  நட்போடு அரசியலைக் கலக்காதீர்கள். என்றும் எங்கள் நட்பு தொடரும்.

@bhoovi
 
deepan chakravarthy:  மூன்றாம் உலகப் போர் விவசாயத்தை காப்பாற்றுமா? எனக்கு இந்த உலகம் வெகு சீக்கிரத்தில் அழிவைக் காணப் போகிறது என்று தோன்றுகிறது!
@vairamuthu: விவசாயத்தைக் காப்பாற்றத்தான் மூன்றாம் உலகப்போர்! உலகம் வாழும்; நம்பிக்கையை வாழவிடுங்கள்.

@sudhasasi SASIKUMAR GANESAN:  பணம் புகழ் தேடி செல்பவர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?
@vairamuthu:: தொடக்கத்தில் பணம் புகழை நீங்கள் தேடிச் செல்ல வேண்டும்; பின்பு பணமும் புகழும் உங்களைத் தேடி வர வேண்டும்

@santhu__92 santhosh:  உங்கள் வாழ்நாள் லட்சியம்...???
@vairamuthu: தமிழுக்கு உலக அங்கீகாரம்

@deepakpradeepA
 
மதுரை வால் பையன்:  உங்கள் படைப்பில் உங்களையே நெகிழ வைத்தவை எதுவென்று சொல்ல முடியுமா
@vairamuthu: படைத்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலகப் போர்; அதன் இறுதி அத்தியாயத்தில் கதறி அழுதுவிட்டேன்.

@mejack03 Jagan Ealumalai:  உங்களுக்கு பிடித்த தமிழ் பெயர்?
@vairamuthu: வண்டார் குழலி

@drkandaraghav
 
kandaswamy:கம்பனும்,வள்ளுவனும் மனப்பாடச் செய்யுளை விட்டு வெளியேறி,மனதிலும் வாழ்க்கையிலும் கலப்பது நிகழுமா?
@vairamuthu: கல்வி வார்த்தையாகாமல் வாழ்க்கையானால் நிகழும்

@Sandiyaru பருத்திவீரன்:  ஆங்கிலம் கலக்கா தமிழை அனைவரும் பேச என்ன நடைமுறை மாற்றம் செய்ய வேண்டும்?
@vairamuthu: ஆங்கிலம் கலவாமல் பேசுவது மதிப்புகுரியது என்று கருதப்படவேண்டும்

@gundubulb
 
குண்டு பல்பு:  உங்களுடைய முதல் படைப்பு எந்த இதழில் வந்தன ? எந்த வயதில் ??
@vairamuthu: தேன்மழைபத்திரிகையில் 16; வயதில்

@BsimpleBsample
 
Anand:  Hello sir,i am your great fan,Like to wish you for your quality lyrics with great thoughts,like to hear more & more from u :-))
@vairamuthu: வாழ்த்துக்கு நன்றி

@BalaNimalan
 
Bala Nimalan:  உண்மை காதல் என்றால் என்ன ?
@vairamuthu: உடலைத்தாண்டி உயிர்சேருவது.

@kaadhalkaadhal
 
காதல்: என்னைப் பற்றி எழுதி நீங்கள் அதிக பிரபலம் ஆனீர்கள்.உண்மைதானே... - காதல்
@vairamuthu:  நான் எழுதி நீங்களும் பிரபலமானது உண்மைதானே.

@KuttySattan சாகசன்:  கவியரசு கண்ணதாசன் பற்றி ஒரு கவிதை ????
@vairamuthu: இன்னொரு தேசியகீதம் படித்துப்பாருங்கள் கவியரசர் பற்றி 2 தனிக்கவிதைகள் உண்டு

@rohinitweetss
 
Rohini Ramadoss:  சொந்தஊரின் மீதான உங்கள் காதலின் வெளிப்பாடு தான்,கருவாச்சி காவியம்,மூன்றாம் உலகப்போர் " களம் தேனி மாவட்டம்..நான் சரியா???
@vairamuthu: என்னைப் புரிந்து கொண்டீர்கள்; மிகச்சரி

@palayapaper
 
பழையபேப்பர்: கவிஞரே வணக்கம்,தண்ணீர் தேசத்தை திரைப்படுத்த எண்ணம் இருக்கிறதா ?
@vairamuthu: சில இயக்குநர்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறது.

@jenokarthic
 
ஜீனோ கார்த்திக்:  மணிரத்னம் சாரின் படம் வெளியீடு எப்போது ஐயா?
@vairamuthu: படப்பிடிப்பு தொடங்கப்போகிறது; ஜுன் மாதம் வெளிவரலாம்.

@IncredibleMonke
 
Incredible Monkey:  6 லட்சம் தமிழ் வார்தைகளில் உங்கள் உயிரில் கலந்த 5 தமிழ் வார்த்தைகளை வரிசை படுத்தி தர முடியுமா இப்போது?
@vairamuthu: 1. எழுத்து 2. சொல் 3. பொருள் 4. யாப்பு 5. அணி

@Sunradpm
 
Sundar:  ஐயா! கள்ளிகாட்டு இதிகாசம் , கருவாச்சி காவியம் போன்று மீண்டும் ஒரு உயிர் மிக்க படைப்பை எப்போது தருவீர்கள்?
@vairamuthu: மூன்றாம் உலகப்போர் படிக்கவில்லையா ?

@tha_prabakaran Prabakaran: உங்களுக்கு மிகவும் பிடித்த திருக்குறள்...? காரணம்...?
@vairamuthu:  "எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு"

@i_am_mano மனோ தமிழை விட சமஸ்கிருதம் தான் சிறந்தது என்ற சிலரின் கூற்று குறித்து உங்கள் கருத்து?
@vairamuthu: தமிழும் சமஸ்கிருதமும் இந்திய நாகரிகத்தின் இரு கண்கள்; கண்களில் எது சிறந்தது ? எது தாழ்ந்தது?

@Sunradpm
 
Sundar  பணியில் மன உளைச்சல் ஏற்படும்போது அதிலிருந்து வெளி வர என்ன செய்ய வேண்டும் ஐயா?
@vairamuthu: கண்கள் மூடுங்கள்; உங்கள் எண்ணங்களை நெற்றிப் பொட்டில் நிறுத்துங்கள்; உங்கள் உடல் பெயர் தொழில் மறந்துவிடுங்கள் அமைதி அமைதி என்று உச்சரியுங்கள்

5 comments:

  1. Thanks u done a great work.. by @gundubulb (Twitter)

    ReplyDelete
  2. Thanks.....

    i am @kaadhalkaadhal


    thanks for post my tweet to. felt super excited.

    ReplyDelete
  3. nice collection.. cute job :-)

    ReplyDelete

வாங்க பழகலாம்